பூக்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி

சனி, 16 ஏப்ரல் 2022 (18:19 IST)
ஈஸ்டர்,  சித்ரா பெளர்ணமி   காரணத்தால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈஸ்டர் மற்றும் சித்ரா பெளணர்மி காரணத்தால் அண்டை மா நில வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்வதாக கொயம்பீடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மல்லிகை -500க்கும், பன்னீர் ரோஜா -200 ரூபாய்க்கும்ம அரளிப்பூ -20 ரூபாய்க்கும், கனகாம்பரம் –ரூ.400க்கும், சாக்லேட் ரோஜா ரூ.140க்கும் விற்கப்படுகிறது,

நேற்று ரூ.300க்கும் விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ரூ.500 க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்