எனது ரீ எண்ட்டிரீயால் மக்கள் மகிழ்ச்சி - வைகைப்புயல் வடிவேலு

சனி, 13 ஆகஸ்ட் 2022 (20:50 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நகராக வலம் வந்தவர் வடிவேலு. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அரசியலில் பிரசாரம் செய்த வடிவேலு , அதன் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார்.

.அதன் பின், 2017 ஆம் ஆண்டு மெர்சல் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.  இதையடுத்து தற்போது      சுராஜ் இயக்கத்தில்,  நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும்,  பி.வாசு இயக்கத்தில், சந்திரமுகி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  வடிவேலுயின் ஒரு புதிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தனது ரீ  எண்ட்ரியால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும்,   வைகை இவ்வளவு நாடக்ளாக வறண்டு கொண்டிருக்கிறது என்றும் இப்போது திறந்து ஓடிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்