மீண்டும் இணையும் பரியேறும் பெருமாள் ஜோடி !

திங்கள், 21 டிசம்பர் 2020 (09:56 IST)
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருந்த கதிரும் ஆனந்தியும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.

2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். பா ரஞ்சித் தயாரித்த இந்த திரைப்படத்தில் கதிரும், ஆனந்தியும் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்த ஜோடியும் பெரிதாகக் கவனம் பெற்றது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்