விருதுகள் வாங்கி வாங்கி அலுத்து போன பரியேறும் பெருமாள் - மீண்டும் சிறந்த திரைப்பட விருது!

புதன், 9 ஜனவரி 2019 (11:00 IST)
நார்வேயில் நடந்த தமிழ் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


 
பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்'. இதில் கதிர், ஆனந்தி ஜோடியாக நடித்து இருந்தார்கள். 
 
மாரி செல்வராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நிகழ்கால சாதிய வன்முறை தாக்கத்தையும் பிரதிபலித்தது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.  பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் 10வது சர்வதேச நார்வே தமிழ் திரைப்பட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்பட்டது. இதில் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே பரியேறும் பெருமாள் திரைப்படம் , கோவாவில் நடந்த திரைப்பட விழாவிலும் விருது வென்றது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்