டப்பிங் பேசுவதைத் தவிர்த்த நயன்தாரா

செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (12:10 IST)
‘டோரா’ படத்தின் தோல்வியால், சொந்தக்குரலில் டப்பிங் பேசுவதைத் தவிர்த்துள்ளார் நயன்தாரா.
 


 

சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்னும் சொந்தமாக டப்பிங் பேசத் தயங்குகிறார் நயன்தாரா. எனவே, பெரும்பாலும் அவருக்கு தீபா வெங்கட் தான் குரல் கொடுத்து வருகிறார். ‘ராஜா ராணி’, ‘தனி ஒருவன்’, ‘மாயா’ என சமீபத்திய ஹிட் படங்களுக்கு தீபா வெங்கட் தான் குரல் கொடுத்தார்.
அதை முறியடித்து, ‘டோரா’ படத்துக்கு சொந்தக்குரலில் டப்பிங் பேச வைத்தனர். நயனும் மகிழ்ச்சியுடன் பேசினார். ஆனால், அந்தப் படம் தோல்வி அடைந்ததால், ‘இனிமேல் டப்பிங் பேசக்கூடாது’ என முடிவெடுத்துள்ளாராம். அதனால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு, தீபா வெங்கட்டையே டப்பிங் பேசச் சொல்லிவிட்டாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்