மிஷ்கின் எடுக்க இருப்பது ‘ஏ’ படமாம்…

சனி, 17 மார்ச் 2018 (14:46 IST)
மிஷ்கின் அடுத்ததாக இயக்கவுள்ள படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்கும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 


‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து சாந்தனு நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் மிஷ்கின். பி.சி.ஸ்ரீராம் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’, ‘நட்புனா என்னானு தெரியுமா?’ படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படம் குறித்துப் பேசிய தயாரிப்பாளர், “மிஷ்கின் மீதுள்ள அனைத்து எதிர்மறை விமர்சனங்களையும் இந்தப் படம் நீக்கிவிடும். இந்தியாவின் முதல் டெரிபிக் ஹாரர் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் நிச்சயம் ‘ஏ’ சான்றிதழ் தான் தருவார்கள்” என்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்