40 ஆண்டுகளை நிறைவு செய்யும் மூன்றாம் பிறை… நினைவு மலர் வெளியீடு!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (15:48 IST)
1982 ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை திரைப்படம் நாற்பதாண்டுகளை நிறைவு செய்கிறது.

பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மூன்றாம் பிறை திரைப்படம் தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்துக்காக கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார்.

இந்த படம் 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாக பல திரையரங்குகளில் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த படம் 40 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் பாலு மகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறனும், திரைக்கதை எழுத்தாளர் அஜயன் பாலாவும் இணைந்து மூன்றாம் பிறை நினைவு மலர் ஒன்றை வெளியிட உள்ளார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்