சிம்புவுக்கு பிறந்தநாள் பரிசளித்த துபாய் நாட்டு அரசு!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (15:32 IST)
நடிகர் சிம்பு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட துபாய்க்கு சென்றுள்ளாராம்.

நடிகர் சிம்புவின் 39 ஆவது பிறந்தநாளை இன்று அவரின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சிம்புவின் திரை உலக பயணம் மிக மோசமாக அமைந்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி பெற்று தந்து அவரை மீண்டும் லைம் லைட்டில் கொண்டுவந்துள்ளது.

மேலும் இப்போது நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவரும் சிம்பு, பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாட துபாய்க்கு சென்றுள்ளாராம். அங்கு அவருக்கு துபாய் நாட்டு அரசு அவருக்கு கோல்டன் விசா அளித்து கௌரவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாக் கலைஞர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்