விரைவில் நல்ல செய்தி: எஸ்பிபி சரணின் புதிய வீடியோ

வியாழன், 3 செப்டம்பர் 2020 (17:27 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து தினதோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு அப்டேட் தரும் எஸ்பிபி சரண் அவர்கள் சற்று முன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
அந்த வீடியோவில் தனது தந்தை எஸ்பிபி அவர்களின் உடல்நிலை கடந்த 4 நாட்களாக சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளார். மேலும் வரும் திங்கட்கிழமை நல்ல செய்தி ஒன்று எதிர்பார்க்கலாம் என்றும் அந்த செய்தி அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
தனது தந்தை குணமாகி வருவதற்கு கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனைஉஏ காரணம் என்றும் அவர்களுக்குத் தான் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எஸ்பிபி சரண் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் 
 
எஸ்பிபி சரணின் இந்த வீடியோவை எடுத்து திங்கட்கிழமை வரும் நல்ல செய்தி என்னவாக இருக்கும் என்று எஸ்பிபியின் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்