இனிமேல் நாம் இந்தியன் இல்ல, செளத் இந்தியன்: நடிகர் மயில்சாமி ஆவேசம்

வெள்ளி, 11 டிசம்பர் 2020 (18:46 IST)
வேளாண் மசோதா குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கருத்தை ஆவேசமாகக் கூறியுள்ளார் 
 
வேளாண் மசோதாவை கொண்டு வந்து விட்டார்கள் ஆனால் அந்த மசோதா விவசாயிகளுக்கு நல்லது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால் எந்த துறை ஒரு மசோதாவை கொண்டு வந்தார்களோ அந்த துறை சார்ந்த மந்திரி ராஜினாமா செய்துவிட்டார். அப்படி என்றால் அந்த மசோதா தவறு என்றுதானே அர்த்தம் 
 
இனிமேல் நாம் இந்தியர்கள் என்று சொல்வதற்கு பெருமை இல்லை. இனிமேல் யார் கேட்டாலும் சவுத் இந்தியன் என்று தான் சொல்லவேண்டும். நார்த் இந்தியன் என்று சொல்லவே கூடாது என்று கூறியுள்ளார் 
 
டெல்லி வரை சென்று போராடியும் மத்திய அரசு திரும்பி பார்க்கவில்லை. இங்கே இருக்கிற இருவரும் ஏன் எதற்கு என்று கேட்காமல் அனைத்திலும் கையெழுத்து போட்டு வருகிறார்கள். இவை அனைத்தும் மக்களுக்கு விரோதமாக உள்ளது என்று மயில்சாமி கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்