‘ரஜினி சார் கூட படம் பண்ணப் பேச்சுவார்த்தை நடக்குது’... இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல்!

vinoth

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:44 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.

சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இந்த படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் விரைவில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது “ரஜினி சார் கூட இணைந்து படம் பண்ணப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடித்துள்ளது. அவரை வைத்து படம் இயக்க எனக்கு ஆசையிருக்கிறது” என தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அடுத்து கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டு இந்த படத்தைத் தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்