மஞ்சும்மள் பாய்ஸ்க்கு தமிழ், மலையாளத்தில் கிடைத்த வரவேற்பு கிடைத்ததா?

vinoth

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:22 IST)
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டு 200  கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மும்பையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப் பட்டு வருகிறது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை மஞ்ஞும்மள் பாய்ஸ் நிகழ்த்தியுள்ளது.  தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தெலுங்கில் இந்த படத்தை டப் செய்து நேற்று ரிலீஸ் செய்துள்ளது. குறைவான திரைகளிலேயே இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் தற்போது படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகமாகி வருகிறது. தமிழ் மலையாளத்தில் கிடைத்தது போலவே கிளைமேக் காட்சி தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்