இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

செவ்வாய், 19 ஜூலை 2022 (08:06 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
இந்த படத்தின் வெளியீட்டு பணியில் ணிரத்னம் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமை படுத்துக் கொண்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்நிலையில் மணிரத்னம் விரைவில் குணமடைந்து பொன்னியின் செல்வன் பணிகளை கவனிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்