நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்!

புதன், 30 ஜூன் 2021 (12:23 IST)
பாலிவுட்டின் முன்னணி நடிகையும் கிரிக்கெட் வர்ணனையாளருமான மந்திரா பேடியின் கணவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மந்திரா பேடியும் இயக்குனர் ராஜ் கௌஷலும் திருமணம் செய்துகொண்டு இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை ராஜ் கௌஷல் வீட்டிலேயே மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளதாக நடிகரும் ராஜின் நெருங்கிய நண்பருமான ரோஹித் போஸ் ராய் தனது சமூகவலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். ராஜின் மறைவு பாலிவுட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்