பா ரஞிசித் -விக்ரம் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்…?

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:31 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் நேற்று ஆந்திராவில் தொடங்கியுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் 15 நாட்கள் ஆந்திராவில் நடக்க உள்ளது. இந்த படம் 19 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவின் கோலார் தங்க வயல் பகுதிகளில் நடந்த கதையைக் கொண்டு உருவாகிறது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்