விஜய் படத்துக்காக சென்னையின் முக்கிய பாலம் தத்ரூபமாக அமைப்பு! எது தெரியுமா?

வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:01 IST)
அட்லீ இயக்கத்தில் தெறி,மெர்சலுக்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய் நடிக்க உள்ளது அனைவருக்கும் தெரியும்.


 
தளபதி 63 என அழைக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதுதவிர கதிர், ரோபோ சங்கரின் மகள் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.ஏஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
 
இந்த  படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய், கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடிப்பதாக நாம் கேள்விபட்டிருப்போம்.
 
சென்னையில் உள்ள பின்னி மில்லில் அமைக்கப்பட்ட அரங்கத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
 
அடுத்தகட்டமாக சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அங்கு சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை அப்படியே செட் அமைத்து உருவாக்கி வருகிறார்கள். இரவு பகலாக அதற்கான பணி நடந்து வருகிறது. பார்ப்பதற்கு நிஜ நேப்பியர் பாலத்தைப் பார்ப்பது போன்றே உள்ளது. அந்த அளவுக்கு தத்ரூபமாக அந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்