லைகா கைக்கு சென்ற ரஜினிகாந்த் படம்!

வெள்ளி, 30 ஜூலை 2021 (09:38 IST)
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அண்ணாத்த படத்தை முடிந்த நிலையில் ரஜினிகாந்த் அடுத்த படத்துக்கான கதைக் கேட்டல் மற்றும் தயாரிப்பு நிறுவன்ம் ஆகியவற்றில் இறங்கியுள்ளார். அந்த படத்தை இயக்க தேசிங் பெரியசாமி ஒப்பந்தம் ஆக, தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஆகியதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து விறுவிறுவென திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டார் இயக்குனர். ஆனால் இப்போது படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்குக் காரணம் படத்தில் இடம்பெறும் ஒரு பிளாஷ்பேக் காட்சியை படமாக்க எக்கச்சக்கமாக செலவாகும் என தயாரிப்பு நிறுவனம் அஞ்சுகிறதாம். ரஜினி சம்பளத்தோடு படத்தின் பட்ஜெட் எல்லாம் சேர்த்தால் 200 கோடிக்கு மேல் செல்ல அதை திரும்ப எடுக்க முடியுமா என்ற குழப்பத்தில் இருப்பதால் இப்போதைக்கு படத்தின் வேலைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி இந்த படத்தை தயாரிக்க லைகா நிறுவனத்தை டிக் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ரஜினி நடித்த 2.0 மற்றும் தர்பார் ஆகிய படங்களால் லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்