’பொன்னியின் செல்வன் 2’ படம் குறித்து முக்கிய அறிவிப்பு: லைகா

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:29 IST)
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் வசூலில் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே 
 
உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது தமிழில் உருவான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை மாலை 4 மணிக்கு பொன்னியின் செல்வன் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்