தளபதி 67 படத்தில் நடந்த திடீர் மாற்றம்… லோகேஷ் எடுத்த முடிவு!

செவ்வாய், 22 நவம்பர் 2022 (10:20 IST)
விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

மூனாரில் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் தமிழ்நாட்டில் விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்தினால், ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியாது என்று இப்போது மும்பை அருகே மூனாறு போன்ற ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே ஷூட் செய்ய இயக்குனர் லோகேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்