நடிகை குஷ்புவுக்கு என்ன ஆச்சு… திடீரென்று மருத்துவமனையில் அனுமதி

வியாழன், 6 அக்டோபர் 2022 (15:41 IST)
நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கிய நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின. பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.

தோல்வியால் துவண்டிருந்த அவர் பாஜகவில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என ஆசையில் இருந்துள்ளார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் மெஹா தொடர் ஒன்றில் நடித்துள்ளார். மீரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த மெஹா சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக உடல் எடை குறைப்பு பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது அவர் முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் 2 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்