நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து முடித்துள்ளார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து ஜூன் 20 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு அதற்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படம் 3 மணிநேரம் 15 நிமிடம் ஓடுமளவுக்கு வெட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக நீண்ட நேரம் ஓடும் படங்கள் ரசிகர்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்கின்றன. அதன் காரணமாக பட ரிலீஸுக்குப் பிறகு படக்குழுவினர் நீளத்தைக் குறைக்க சில காட்சிகளைக் கத்தரிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் அனிமல் மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்கள் மூன்று மணி நேரத்துக்கு மேல் இருந்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.