"சில வருடங்களுக்கு முன் என் கை குழந்தையாக இருந்த எங்கள் மகன், இன்று தனது கையால் பட்டத்தை வாங்கியதை பார்க்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. எங்களுக்கு மேல் வளர்ந்துள்ள எங்கள் மகன் இன்னும் வளர்ச்சி அடைவான். நீ எங்களை பெருமைப்படுத்தி விட்டாய்" என்று சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் சூர்யாவின் மகள் தியா பட்டம் பெற்ற நிலையில், சென்னையில் உள்ள பள்ளியில் தனுஷின் மகன் பட்டம் பெற்றார். இப்போது சிம்ரனின் மகனும் பட்டம் பெற்றுள்ளார். இதையடுத்து திரையுலக நட்சத்திரங்களின் வாரிசுகள் வரிசையாக பட்டங்களை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.