மீண்டும் இயக்குனராகும் கிருத்திகா உதயநிதி!

புதன், 17 மார்ச் 2021 (18:14 IST)
வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி தனது மூன்றாவது படத்தை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

நடிகர் மற்றும் அரசியல்வாதியான உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் இயக்கத்துக்கு ஒரு சிறிய இடைவெளி விட்டிருந்த அவர் இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளாராம். அதற்காக கதை எழுதும் பணிகளில் இப்போது அவர் ஈடுபட்டுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்