விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய விளம்பரங்களை செய்து வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் கோலி. இந்நிலையில் ஆர் சி பி அணியினருடன் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் “உங்களுக்கு பிடித்த, நீங்கள் அதிகமுறைக் கேட்கும் பாடல் எது?” என்ற கேள்விக்கு ஒரு தமிழ்ப் பாடலை பதிலாக சொல்லியுள்ளார்.