சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவையும் எடுக்கலாம் கேரள அரசு முடிவு...

வியாழன், 18 அக்டோபர் 2018 (20:06 IST)
போராட்டக்காரர்களுடன் சமரசத்துக்கு தயார் என தேவசம் போர்டு அறிவித்துள்ள நிலையில் கேரளா அரசு இந்த அறிவிப்பு விடுத்துள்ளது.
அனைத்து பெண்களூம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழையலாம் என்ற சுரீம் கோர்டின் உத்தரவை எதிர்த்து கேரளாவில் பக்தர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்ட் எந்த முடிவையும் எடுக்கலாம் என இன்று மாலையில் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
 
கோயிலுக்குள் அனைத்து பெண்களும் நுழைவதற்கு பலமான  எதிர்ப்புகள்  வந்த நிலையில் கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
 
மேலும் வ்மாநிலத்தில் பிரச்சனைகள் பெரும் பூதாகரமாக வெடிக்காமல் இருப்பதற்காக தற்போது கேரள அரசு ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்