மூனு பேரும் மூனு திசையில்… ஏக குழப்பத்தில் விக்னேஷ் சிவன்!

சனி, 2 அக்டோபர் 2021 (14:42 IST)
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் படத்தை முடிக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் திட்டமிட்டால் படத்தில் 3 முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூன்று பேருமே தங்கள் வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனராம். அதனால் அவர்களின் தேதிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாம். இதனால் விக்னேஷ் சிவன் குழப்பத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்