ஒரு வருட போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி: நடிகர் கார்த்தி டுவிட்

வெள்ளி, 19 நவம்பர் 2021 (13:37 IST)
மத்திய அரசு விவசாயிகளுக்கான வேளாண் சட்டங்களை சமீபத்தில் அமல்படுத்த இந்த நிலையில் அந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து ஒரு வருடமாக போராட்டம் நடந்து வந்தது
 
இந்த போராட்டம் காரணமாக வேளாண் சட்டங்கள் வாபஸ் என்று அறிக்கை வெளியானதிலிருந்து விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறிய போது மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒரு வருட இடை விடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கு புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் என்று தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்