வரவேற்பைக் குவிக்கும் கேஜிஎஃப் நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் ‘காந்தாரா’

புதன், 5 அக்டோபர் 2022 (15:02 IST)
ஹோம்பலே நிறுவனம் தயாரித்துள்ள காந்தாரா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

மொழி தாண்டியும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சப்டைட்டில் வசதியோடு இந்த படம் ஓடி வருகிறது. பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரசிகர்கள் ஆவலாகப் பார்க்கும் படமாக காந்தார அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்