என் முன்னால் காதலரும் போதைக்கு அடிமையாக இருந்தார் – யாரை சொல்கிறார் கங்கனா!

திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (17:29 IST)
நடிகை கங்கனா ரனாவத் சுஷாந்தின் மரணத்துக்குப் பிறகு பாலிவுட் திரையுலகைக் கடுமையாக சாடி வருகிறார்.

நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்தை அடுத்து அங்கு நிகழ்வும் போதை சாம்ராஜ்யம் மற்றும் நெப்போட்டிச அரசியல் ஆகியவற்றைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றைக் கூறியுள்ளார்.

அதில் எனது முன்னாள் காதலரும் இது போன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்தான் எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹ்ருத்திக் ரோஷனுடன் அவர் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். அதனால் ரோஷன் தன் மனைவியைப் பிரிந்தார். பின்னர் கங்கனாவும் அவரை விட்டு பிரிந்தார்.

ஆனால் அவ்வப்போது ரோஷனைப் பற்றி விமர்சனங்களை வைத்து வந்தார் கங்கனா ரணாவத்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்