தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்! ஏன் இந்த முடிவு!

சனி, 5 செப்டம்பர் 2020 (17:53 IST)
ரஜினி கமலின் ஆஸ்தான் இயக்குனராக ஒரு காலத்தில் இருந்தவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

லிங்கா படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தமிழில் படங்களே இயக்கவில்லை. அதனால் அவர் சும்மா இருக்கிறார் என நினைத்து விடாதீர்கள். கன்னடம் மற்றும் தெலுங்கில் அவர் வரிசையாக படங்கள் இயக்கி வருகிறார். கடைசியாக தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து படம் இயக்கிய அவர் அடுத்தும் பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தின் நாயகி கேத்ரின் தெரேசாவை ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு காலத்தில் கமர்ஷியல் கிங்காக இருந்த கே எஸ் ரவிக்குமாருக்கு இப்போது எந்த தமிழ் ஹீரோக்களும் கால்ஷீட் தராததால் அக்கட தேசத்துக்கு ஒதுங்கியுள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்