ஜோதிகாவின் அடுத்த படத்துக்கு இரண்டு நாடுகளில் தடையா?

செவ்வாய், 21 நவம்பர் 2023 (13:58 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். நவம்பர் 23 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்பதால் கத்தார் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளில் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்