புது இயக்குனர்கள் படத்தில் நடிப்பதில் சுயநலமும் உள்ளது… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

vinoth

வியாழன், 24 அக்டோபர் 2024 (09:07 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது விவாகரத்துக்கு ரவி விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஆர்த்தி தரப்பில், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ரவி இந்த முடிவை எடுத்துள்ளார் என சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக விவாதங்கள் நடந்து தற்போதுதான் சர்ச்சைகள் அடங்கியுள்ளன.  இந்நிலையில் ஜெயம் ரவி தற்காலிகமாக தற்போது மும்பையில் குடியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் அவர் புதிதாக மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் நடித்துள்ள, தீபாவளிக்கு ரிலீஸாகும் பிரதர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் அறிமுக இயக்குனர்களின் படங்களில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் “புது இயக்குனர்கள் படங்களில் நடிப்பதில் ஒரு சுயநலமும் உள்ளது. அது என்னவென்றால் அவர்கள் குறைந்தது ஒரு கதையை இரண்டு வருடமாக எழுதுவார்கள். அதனால் அவர்கள் கதை சிறப்பாக இருக்கும். நான் அவர்களுக்கு ஒரே ஒரு  டெஸ்ட் மட்டும்தான் வைப்பேன். அது என்னவென்றால் அவர்களுக்கு சினிமா பற்றிய தொழில்நுட்ப அறிவு இருக்கிறதா என்றுதான். பிரதீப் என்னிடம் கோமாளி கதையை சொன்னபோது நான் அவரிடம் ஒரு சீனை மட்டும் படமாக்கி எடுத்துவர சொன்னேன். அவர் சரியாக அதை செய்தார். அதன் பின்னர் நான் அவரிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்