பணம் இருந்தா இப்படியும் செய்வாங்களோ? நாய்க்கு இருக்குற வாழ்க்கை கூட நமக்கில்ல!

வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:47 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது தன்னுடைய செல்ல பிராணி நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதனை இன்ஸ்டாவில் வெளியிட்டு பலரிடம் வாங்கி கட்டி வருகிறார். இதற்கு பதிலா சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுற ரெண்டு பேருக்கு உணவு வாங்கி கொடுக்கலாம்ல... பணம் இருந்தால் இப்படியெல்லாம் பண்ண தோணுமா? என விளாசித்துள்ளனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My girl turns 1

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்