இந்நிலையில், அவர் கடந்த காலத்தில் அளித்த ஒரு நேர்காணல் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகின்றது. அதில், "மார்க்ஸின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது கல்லறையை லண்டனில் பார்த்த பிறகு, நானும் எனக்கென ஒரு கல்லறை கட்டவேண்டும் என்று முடிவு செய்தேன். முதலில் மார்பிளில் அமைத்தேன். பின்னர் அது பழுதடைந்ததால் கிரானைட்டில் மாற்றினேன். என் விருப்பப்படி சில பைபிள் வசனங்களுடன் அமைத்துள்ளேன். இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை" என கூறியிருந்தார்.