நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜாவை சந்தித்த கங்கை அமரன்!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (08:39 IST)
நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜாவை சந்தித்த கங்கை அமரன்!
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது சகோதரர் இளையராஜாவை சந்தித்ததாக கங்கை அமரன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 
 
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவும் கங்கை அமரனும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் நேற்று இளையராஜாவை அவரது இல்லத்தில் கங்கை அமரன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்து உறவுகள் தொடர்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த புகைப்படத்தை இசை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதேபோல் இளையராஜா மற்றும் கங்கைஅமரன் மீண்டும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்