வெற்றி தொடர்ந்து கொண்டிருந்தால் அதன் அருமை தெரியாது.. தோல்வியும் வேண்டும்: ரஜினிகாந்த்

Siva

ஞாயிறு, 14 செப்டம்பர் 2025 (08:40 IST)
சென்னையில் இசைஞானி இளையராஜாவின் சிம்பனி இசை தொகுப்பை பாராட்டி நடந்த விழாவில், ரஜினிகாந்த் உணர்ச்சிபூர்வமாக பேசினார். தனது பேச்சில், இளையராஜாவின் இசைப் பயணம், அர்ப்பணிப்பு, மற்றும் மன உறுதி குறித்து புகழ்ந்துரைத்தார்.
 
"என் கண்களால் பார்த்த ஒரு ஆச்சரியமான மனிதர் இளையராஜா," என்று கூறி, 50 ஆண்டுகால இசைச் சாதனைகளையும், 1600 படங்களையும் பட்டியலிட்டார். 'ராஜாதி ராஜா' படத்தின் வெற்றி குறித்து இளையராஜா தனக்கு அளித்த அசைக்க முடியாத நம்பிக்கையை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். மனைவி ஜீவா, மகள் பவதாரணி ஆகியோரின் மறைவுக்கு பிறகும் அவர் இசைப்பணியை தொடர்ந்த அவரது மன உறுதியை பாராட்டினார்.
 
மேலும், வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி மட்டுமே இருந்தால், அதன் அருமை தெரியாது என்றும், தோல்விகளும் இடை இடையே வர வேண்டும் என்றும் ரஜினிகாந்த் பேசினார். இளையராஜாவுக்கு ஒரு காலத்தில் பெரிய இசையமைப்பாளர்கள் போட்டியாக வந்தபோது, இயக்குநர்கள் மற்றும் ரஜினிகாந்த் உட்பட பலரும் அவர்களை பின்தொடர்ந்ததை குறிப்பிட்டு, இந்த நிகழ்வு இளையராஜாவின் வெற்றியை மேலும் உயர்த்தியது என்று கூறினார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்