இசைஞானி இளையராஜா மார்ச் 9ஆம் தேதி லண்டனில் சிம்போனி அரங்கேற்றம் செய்ய இருக்கும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இசைஞானி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது.
அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பதை நமக்குப் புரியவைக்கிறார்.
"இசை எனக்குத் தொழில் அல்ல; இசை என்னிலிருந்து வேறு அல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன்" - என அவர் விளம்புகிறபோது அவரின் விழிகளிலிருந்து வீசும் ஞானஒளியை உணரமுடிகிறது.
அது-
தான் என்கிற அகந்தையின் வெளிப்பாடு அல்ல;
தன்னை உணர்ந்துள்ள மெய்ஞானத்தின் புலப்பாடு!
அவர் இசைஞானி என்பதைவிட #மெய்ஞானி என்பதே பொருந்தும்.