ரஜினியை இயக்கும் ராஜமவுலி - பிரமிப்பூட்டும் பிரம்மாண்டம் நிச்சயம்..!

வியாழன், 3 ஜனவரி 2019 (14:38 IST)
பிரமாண்ட படைப்பான பாகுபலி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ராஜமவுலி, ரஜினியை வைத்து நான் படம் இயக்கினால் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கும் என்று கூறியிருக்கிறார்.


 
பாகுபலி படத்தை இயக்கி தென்னிந்திய மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் பிரபலமான இயக்குனர் ராஜமௌலி, இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு அமைந்திருக்கும். ராஜமௌலி தெலுங்கு நடிகர்களை வைத்து மட்டுமே படத்தை இயக்கியுள்ளார்.
 
அவர் தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். அதற்கு அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்தி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமவுலியிடம் நீங்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் உங்கள் தேர்வு ரஜினியா இல்லை கமலா? என கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு ராஜமவுலி நான் ரஜினியை வைத்துதான் படம் இயக்குவேன். நான் அவருடன் இணையும் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் விசில் பறக்கும்’ என்று பதில் அளித்துள்ளார். 
 
பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ராஜமௌலி ரஜினியை வைத்து படம் இயக்கினால் பிரமாண்டதிற்கு கொஞ்சமும் குறைவிருக்காது. பாகுபலி 2 வெளியான நேரத்தில் ஒரு தொலைக்காட்சியில் கேட்டபோதும் இதே பதிலைத்தான் ராஜமௌலி சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்