அவர் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது – மிஷ்கின்

வெள்ளி, 18 மார்ச் 2022 (22:29 IST)
தமிழ் சினிமாவில் பிர்பல இயக்குநர் மிஷ்கின் அவர் என் வாழ்வில் கிடைத்த                            வைரம் எனப் புகழ்ந்துள்ளார்.

ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் நடித்துள்ள செல்பி படம் விரைவில் ரிலிஸ் ஆக உள்ளது. ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு செல்பி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை வெற்றிமாறனின் இணை இயக்குனரும் அசுரன் படத்தின் திரைக்கதை எழுத்தாளருமான மதிமாறன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, வெற்றிமாறனின் நண்பன் உதவி இயக்குநராக அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பான் என என் உதவி இயக்குனர்களிடம் கூறினேன்.

வெற்றிமாறனின் பட்டறையில் இருந்து வந்துள்ள மதிமாறன். இப்படம் கமர்சியல் படமாக இருக்கும்! சாமியின் கால்களில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது; ஆனால் நல்ல படம் எடுப்பவர்தான் சாமி…அவர் நல்ல சினிமா எடுத்தால் அவரது காலிலும் நான் விழுவேன் எனத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்