விஜய் சாருடன் ஒரு படம் பண்ணுவேன்- ஜெயம்ரவி பட இயக்குனர்

புதன், 19 அக்டோபர் 2022 (22:25 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் பிரதீப் ரங்க நாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் கோமாளி. இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, காஜல் அகர்வால், யோகிபாபு, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.

ரூ.15 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.181 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூலீட்டியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியானது.


இந்த நிலையில், விஜய் சார்க்கு கதை சொல்லிருப்பதாக இயக்குனர் பிரதீப் ரங்க நாதன் தெரிவித்துள்ளார். அதில், கோமாளி படம் முடிந்தபின்ம் விஜய் சாரிடம் கதை சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. எதிர்க்காலத்தில் அவர் உடன் படம் பண்ணுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்