அந்த பேட்டியில் தன்னுடைய ஆரம்பகட்ட திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: நான் 15 வயதிலே சினிமாவில் நடிக்க வந்தேன். நடிக்க வந்த காலத்தில் இருந்து என்னைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வருகின்றன. அதிலும் வருஷத்துக்கு குறைந்தது பத்து முறையாவது எனக்கு அபார்ஷன் பண்ணியதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுவும் நான் அமெரிக்கா, அலுவா, திருச்சூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அபார்ஷன் செய்து கொண்டதாக கூறி வருகின்றனர். பட வாய்ப்புக்காக நான் பல இயக்குனர்களுடன் படுக்கையை பகிர்ந்தேனாம், கர்ப்பமானேனாம், கருவை கலைத்தேனாம். எத்தனை கிசுகிசுக்கள் வந்தன.