ஹே சினாமிகாவுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஆகும் பிருந்தா… வெளியான தகவல்!

புதன், 1 ஜூன் 2022 (09:20 IST)
ஹே சினாமிகா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நடன இயக்குனர் பிருந்தா.

துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ’ஹேய் சினாமிகா’ படத்தினை நடன இயக்குனர் பிருந்தா இயக்கி இருந்தார். முக்கோணக் காதல் கதையாக உருவாகி வந்த இந்த படம் திரையரங்குகளில் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. ஆனால் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பிருந்தா தற்போது தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தில் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் மகன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்