சினிமாவில் இதற்குப் பஞ்சம் அதிகம்….முன்னணி நடிகர் கவலை !

சனி, 26 ஜூன் 2021 (21:58 IST)
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் பிரித்விராஜ். இவர் தமிழ் சினிமாவில் சப்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலையாள சூப்பர் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான லூசிபர் படம் மெகா ஹிட் அடித்தது. இப்படம் தற்போது தெலுங்கில்  சூப்பர் ஸ்டார் சிரஞ்வீவி நடிப்பில் ரீமேக் படமாக  உருவாகி வருகிறது.

இந்நிலையில்  மலையாள சினிமாவில் சீரியசான படங்கள் அதிகரித்து விட்டதாகவும், காமெடி படங்களுக்கு பஞ்சம்  அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இம்மாதிரி படங்களை எடுக்க இயக்குநர்கள் மறுப்பதாகவும் அவர் வருத்தப்பட்டுள்ளார். மேலும் லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்பூரான் படத்தை வெளிநாட்டில் எடுக்க வேண்டியதுள்ளதால்,  மோகன் லாலை வைத்து ’புரோ டாடி’ என்ற படத்தை இயக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்