தெலுங்கு லூசிபரில் இணைந்த நயன்தாரா… மோகன் ராஜாவும் சமாதானம்!

செவ்வாய், 22 ஜூன் 2021 (16:24 IST)
இயக்குனர் மோகன் ராஜா லூசிபர் படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

இந்த படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மோகன் ராஜா தயாரிப்பாளர்களோடு ஏற்பட்ட மோதல் காரணமாக படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் படத்தை இயக்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்