சில விஷயங்களை சொன்னால் குறை சொல்வது போல இருக்கும்... ‘ஸ்டார்’ படத்தில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ஹரிஷ் கல்யாண்!

vinoth

வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (08:34 IST)
கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்னால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மோசமான விமர்சனம் காரணமாக அதன் பிறகு வசூல் சுத்தமாகக் குறைந்துவிட்டது. அந்த நேரத்தில் ரிலீஸ் ஆன அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இந்த படத்தால் தாக்குப் பிடிக்கவில்லை.  அதனால் அடுத்த லெவலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு இது ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஹரிஷ் கல்யாண்தான். அவரை வைத்து போட்டோஷூட் எல்லாம் எடுக்கப்பட்டு போஸ்டர்கள் ரிலீஸாகி இருந்தன. அந்த போஸ்டர்களில் அவர் ரஜினி கமல் விஜய் அஜித் கெட்டப்களில் காணப்பட்டார். இடையில் கொரோனா தொற்றுப் பரவலால் அந்த திரைப்படம் தாமதம் ஆனது.

பின்னர் திடீரென அந்த படத்தில் கவின் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து தான் வெளியேறியது ஏன் என ஹரிஷ் கல்யாண் தற்போது பேசியுள்ளார். அதில் “அந்த படத்தில் எனக்குத் தெரிந்து சில விஷயங்கள் நடந்தன. எனக்குத் தெரியாமல் பல  விஷயங்கள் நடந்தன. எனக்குத் தெரியாமல் நடந்த விஷயங்களை சம்மந்தப்பட்ட நபர் என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். அவர் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. திடீரென்று ஒருநாள் அந்த படம் வேறொரு நடிகரை வைத்து ஆரம்பிக்கப்படுவதாக அறிந்தேன். இடையில் நடந்தது என்னவென்று தெரியவில்லை.  சில விஷயங்களை சொன்னால் யாரையோ குறை சொல்வது போல இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்