ஆனால் அவர் செய்யும் சில கிறுக்குத் தனங்கள்தான் அவர் மேல் விமர்சனங்கள் எழ காரணமாக அமைகின்றன. அதிலும் படத்தின் பரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசும் போது உணர்ச்சிவசத்தாலும் ஆர்வக் கோளாறும் தனத்தாலும், தன்னை தனியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாலும் அவர் பல நேரங்களில் சம்மந்தம் இல்லாமல் உளறல்களை வெளியிடுகிறார்.
சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார். அதே போல இளையராஜா பற்றி பேசும்போது அவரை ஒருமையில் பேசியிருந்தார். அது ஒரு அன்பின் வெளிப்பாடாக இருந்தாலும் மேடை நாகரிகம் கருதி அப்படி பேசியிருக்க வேண்டாம் என்ற கருத்துகளும் எழுந்தன.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள அந்த படத்தின் கதாநாயகன் நடிகர் குரு சோமசுந்தரம் “மிஷ்கின் இளையராஜா பற்றி ஒருமையில் பேசியது அவரை அவதூறு செய்ய அல்ல. சில நேரங்களில் நாம் கடவுளைக் கூட அடப்பாவி இப்படி பண்ணிட்டியேடா” என்று சொல்கிறோம் இல்லையா? அதுபோலதான். இளையராஜா மேதைகளுக்கு எல்லாம் மேதை. ஆனால் மிஷ்கின் அதே மேடையில் சில வார்த்தைகள் பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை” எனக் கூறியுள்ளார்.