முதல் முறையாக மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்: அயலான் புதிய அப்டேட்

புதன், 12 பிப்ரவரி 2020 (22:22 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் தயாரிப்பில் சமீபத்தில் கேகேஆர் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை இரண்டு வேடத்தில் கூட எந்த ஒரு படத்திலும் நடித்ததில்லை என்ற நிலையில் முதல் முறையாக மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்திசிங் நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, கருணாகரன், இஷா கோபிக,ர் பால சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்