பிரபல நடிகை காலமானார்

செவ்வாய், 9 நவம்பர் 2021 (16:06 IST)
பிரபல மலையாள நடிகை  சாரதா இன்று காலமானார். அவரது  மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 கேரளாவில் நாடகத்தில் மூலம் பிரபலமானவர் நடிகை சாரதா.

ஏற்கனவலே மலையாளத்தில் சாரதா என்பவர் இருந்ததால் இவரை கோழிக்கோடு சாரதா என அழைத்து வந்தனர்.

இவர் மலையாளத்தில் அங்காகுறி என்ற மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர், சல்லாபம், கண்ணெழுதி, பொட்டும் தொட்டு, உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலையி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்