சமூக வலைதளங்களில் "சினிமா செய்திகளை சொல்கிறோம்" என்று தங்களுடைய கற்பனையில் உதிக்கும் செய்திகளை சொல்லி வருபவர்கள் ஏராளம். அந்த வகை குரூப்புகளில் ஒரு குரூப், இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், தக்லைஃப் படத்தை கமல்ஹாசனுக்கே மணிரத்தினம் ரிலீசுக்கு முந்தைய நாளில் தான் காண்பித்ததாக மிகப்பெரிய பொய்யை கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன், தக்லைஃப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ. அவரது அனுமதி இல்லாமல் ஒரு காட்சி கூட எடுக்க முடியாது. அவ்வப்போது அவர், படப்பிடிப்பு முடிந்த உடனே தான் நடித்த காட்சியை ரஷ் பார்த்து, சில திருத்தங்களையும் சொல்லுவார். அது மட்டுமின்றி, படத்தை அவர் பலமுறை பார்த்துவிட்டு, பல திருத்தங்கள் சொன்னதாகவும் படக்குழுவினர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியானது.
இந்த நிலையில், பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து திரையுலக செய்திகளை சொல்லி வரும் ஒரு குரூப், "கமல்ஹாசனுக்கே மணிரத்னம் ரிலீசுக்கு முந்தைய நாளில் தான் தக்லைஃப் படத்தை காட்டியதாகவும், அதேபோல் தான் சிம்புவுக்கும் அதே நாளில் தான் போட்டி காட்டுவதாகவும்" கூறியுள்ளனர்.