வீக் எண்ட்டில் பிக் அப் ஆன எதற்கும் துணிந்தவன்… பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்!

திங்கள், 14 மார்ச் 2022 (09:40 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி ரிலிஸ் ஆனது.

கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மார்ச் 10 ஆம் தேதி சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் ரிலிஸானத். இந்த படம் ஆரம்பம் முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.

இதனால் சில திரையரங்குகளில் முதல் இரண்டு சில காட்சிகள் டிக்கெட்கள் காலியாக கிடந்தன.  ஆனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த படம் பிக் அப் ஆக ஆரம்பித்துள்ளது. பல திரையரங்குகள் நேற்று எதற்கும் துணிந்தவன் படத்தை ஹவுஸ் புல் காட்சியாக ஓட்டியுள்ளன. இதனால் வார இறுதி நாட்களில் நல்ல வசூல் கிடைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்